Thursday, July 17, 2008

நீ நல்லவன் என்பதும்கெட்டவன் என்பதும்
சூழ்நிலை பொருத்து அமைகிறது
நல்லவன் என்றால் பெருமையில்லை
கெட்டவனானால் அது உன் பழியில்லை
பின் மாறிட நினைப்பதும் தவறில்லை
கடவுளை தேடி அலைவதனாலே
பயன் ஒன்றும் உனக்கு வாராது
பிறர் துன்பத்தை நீக்கி வாழ்ந்தாலே
உலகம் உன்னை மறவாது
எடுப்பது என்பதும் மறைப்பது என்பதும்
மனிதன் வகுத்த பண்பாடு
பொதுவாய் எல்லாம் இருப்பதுதானே
உலகம் கொடுத்த சமன்பாடு
ஆசையை துறக்க ஆசைப்படு
கடமையை முடிக்க புறப்படு
நீ விடுதலை கொண்டு வெளிப்படு
ஏழ்மையை ஒழிக்க பாடுபடு

1 comment:

Unknown said...

Kettavanai kadantha nallavane siranthavan un paadal !!

Blog Archive