நாட்டு நடப்பு கேட்டுக்கோ பொன்னையா
நாலும் இங்கே சொல்லப்போறென் கேளையா
என் சித்தியோட ஔடிப்புட்டான் கோட்டீஸவரன்
நான் சித்தபிரமை ஆகிவிட்டேன் கேட்டவுடன்
மரம் வெட்டி சாய்த்துவிட்டான் காலடியில்
அந்த மர்மம் என்ன சொல்லிவிடு காடுவெட்டி
தோழியோட சேர்ந்துபோறா கோவிலுக்கு
பாவம் எல்லாம் தீர்ந்தாதானே தேர்தலுக்கு
மண்டயில ஒன்னும் இல்ல சிலருக்கு
அணிய மாத்திவைக்க நினைக்கிறாங்க தேர்தலுக்கு
அய்யன் வந்து காப்பாத்துவான் தேர்தலிலே
உன் பையன் தொல்ல தாங்கவில்லை மதுரையிலே
மூப்பு வந்து தளர்ந்துவிட்டேன் நானய்யா - உன்
முடிவை இன்னும் சொல்லவில்லை ஏனய்யா
இந்த முறையும் வருவயா? - இல்லையா?
இமயமலை போறப்போறயா சொல்லுயா?
அரை வயிறு கஞ்சிதானே நமக்கு - நீ
அடுத்தவேளைய பார்த்தாதானே சோற்றுக்கு.
1 comment:
Ella arasiyal vaathiyaiyum thottu paaththaacho !!
Post a Comment