Thursday, October 25, 2007

"no caste" please

இன்றோடு ஒழியட்டும் இச்சாதி
இனிமேல் பிறக்கட்டும் சமநீதி

ஆணென்றும் பெண்ணென்றும் இருசாதி
எல்லோரும் இப்போது ஒருசாதி

சாதிகள் பிறந்தது எப்போது
சமத்துவம் பிறக்கட்டும் இப்போது

ஆண்டான் அடிமைகள் இனியில்லை
மேலோன் கீழோன் இனியில்லை

கொடுப்பவன் இன்று மனிதனனான்
இரக்கம் இல்லாதவன் விலங்கானான்

எல்லாம் சமமென ஆகிவிட்டால்
இரத்தல் என்பது கிடையாது

மாற்றம் தேவையென சொல்வார்கள்-ஆனால்
மாறிட மனமங்கு கிடையாது

ஏற்றம் தேவையென சொல்வார்கள்-பின்
அடிமைப்படுத்தி வாழ்வார்கள்

ஏழ்மை ஒழியட்டும் என்பார்கள்
செல்வத்தை பதுக்கி வாழ்வார்கள்

நிலைமை சிராய் ஆகிடவே
நேர்மை கொண்டு நடந்திடுக

No comments:

Blog Archive