இன்றோடு ஒழியட்டும் இச்சாதி
இனிமேல் பிறக்கட்டும் சமநீதி
ஆணென்றும் பெண்ணென்றும் இருசாதி
எல்லோரும் இப்போது ஒருசாதி
சாதிகள் பிறந்தது எப்போது
சமத்துவம் பிறக்கட்டும் இப்போது
ஆண்டான் அடிமைகள் இனியில்லை
மேலோன் கீழோன் இனியில்லை
கொடுப்பவன் இன்று மனிதனனான்
இரக்கம் இல்லாதவன் விலங்கானான்
எல்லாம் சமமென ஆகிவிட்டால்
இரத்தல் என்பது கிடையாது
மாற்றம் தேவையென சொல்வார்கள்-ஆனால்
மாறிட மனமங்கு கிடையாது
ஏற்றம் தேவையென சொல்வார்கள்-பின்
அடிமைப்படுத்தி வாழ்வார்கள்
ஏழ்மை ஒழியட்டும் என்பார்கள்
செல்வத்தை பதுக்கி வாழ்வார்கள்
நிலைமை சிராய் ஆகிடவே
நேர்மை கொண்டு நடந்திடுக
No comments:
Post a Comment