Friday, October 26, 2007

A WRONG LANGUAGE POLICY

தமிழ் காக்கவேண்டும் - தாய்
மொழி காக்க வேண்டும்

பலமொழியை கற்கவேண்டும் - நாம்
பண்டிதராய் ஆகவேண்டும்

தாய்மொழியை நீ சொல்ல
பிறமொழியை அறிய வேண்டும்

நாம் வேலியின் மேல் கவனம் வைத்து
பயிரை இன்று மறந்துவிட்டோம்

பிறமொழியை தடுத்து அழித்து - நாம்
தமிழ் மொழியை மறந்து விட்டோம்

கலை செல்வத்தை நான் தேடி
எட்டு திக்கும் பறந்தோடி

பிறமொழி தெரியா கலைப்பாலே
திரும்பி வந்தேன் பாரதியே

யார் வகுத்தார் இப்பாதை
இது தவறான மொழிப்பாதை

சிந்திப்போம் ஒருபாதை - அது
பார்போற்றும் புதுப்பாதை

No comments:

Blog Archive