தமிழ் காக்கவேண்டும் - தாய்
மொழி காக்க வேண்டும்
பலமொழியை கற்கவேண்டும் - நாம்
பண்டிதராய் ஆகவேண்டும்
தாய்மொழியை நீ சொல்ல
பிறமொழியை அறிய வேண்டும்
நாம் வேலியின் மேல் கவனம் வைத்து
பயிரை இன்று மறந்துவிட்டோம்
பிறமொழியை தடுத்து அழித்து - நாம்
தமிழ் மொழியை மறந்து விட்டோம்
கலை செல்வத்தை நான் தேடி
எட்டு திக்கும் பறந்தோடி
பிறமொழி தெரியா கலைப்பாலே
திரும்பி வந்தேன் பாரதியே
யார் வகுத்தார் இப்பாதை
இது தவறான மொழிப்பாதை
சிந்திப்போம் ஒருபாதை - அது
பார்போற்றும் புதுப்பாதை
No comments:
Post a Comment