ஆண்டுகள் கோடி அழுதாலும்
மாண்டவர் என்றும் திரும்புவதில்லை
இருப்பவர் இங்கு சில கோடி
இறந்தவர் கணக்கில் பல கோடி
செல்வங்கள் அவனும் சேர்த்து வைத்தான்
பணத்தை அவனும் பதுக்கி வைத்தான்
சொந்தங்கள் இன்று அழுகின்றன
பணங்கள் மட்டும் சிரிக்கிறது
இளமையுடன் இருக்கும்போது
எத்தனை வகையில் ஆட்டமடா
இயற்க்கை இன்று மாற்றிவைத்தும்
இருப்பவர் இன்னும் மாறவில்லை
ஊர்வலமாக போகின்றான்
உறவுகள் மட்டும் அழுகின்றன
தெருவை நீயும் கடந்தபின்பு - அந்த
திசையில் யாரும் இல்லையடா
மனதை பார்க்க மறுத்தவனுக்கு
உலகை பார்த்த கடைசி நாள்
காலங்கள் தோறும் நடக்கின்ற
காட்சியில் நாம் எல்லாம் பொம்மையடா
1 comment:
Pothuvaana uravugal ippadiththaan vaazhnthidumo !!
Post a Comment