நான் ஆராய்ச்சியாளன்
உன் உடலின் ஆட்சியாளன்
செவ்வாயில் என் ஆராய்ச்சி
அது சொர்கத்தில் முடிவாச்சி
காற்றாக நான் இருந்தால்
உன் மூச்சோடு உள்சென்று
வெளியேறும் வேளையிலே-உன்
மார்போடு உறவாடி அங்கு
மோட்சத்தை எதிர்கொள்வேன்
உன் இடையினிலே கை நழுவ
நீ மாலையாக எனைத்தழுவ - இதை
மறுக்கவில்லை ஒரு கனமும்
நான் மறக்கவில்லை ஒரு பொழுதும்
போதும் இந்த ஆராய்ச்சி
புதிர் எல்லாம் புரிந்தாச்சி
வாழ்க்கை என்ன பயனாச்சி - இந்த
கேள்வி மனசில் முளைச்சாச்சி
No comments:
Post a Comment