Saturday, January 19, 2008

FARMERS

விவசாய நாடு - பொருக்கவில்லை
இந்த விவசாயிகளின் பாடு

இறைவன் கண்ட தொழிலாளி
இந்த நாட்டில் இவனே ஏமாளி

உழுது அவனும் பயிரிட்டான் - விளைந்த
நெல்லையும் விற்றும் கை சுட்டான்

நெல்லுக்கு சொந்தம் விவசாயி - அதன்
விலையை சொல்வது முதலாளி

ஏனிந்த பேதம் தெரியாதா - விவசாயி
நாதியற்ற கூட்டம் என்று புரியாதா

உழுபவனுக்கு நிலம் சொந்தம் - நெல்லை
விளைத்தவன் சொல்வான் விலை நிர்ணயம்

இந்த சட்டம் அமலுக்கு வரவேண்டும் - விவசாயியின்
வாழ்க்கை முன்னேற்றம் பெறவேண்டும்

No comments:

Blog Archive