நீயே உனக்கு எதிரி
இந்த உண்மை இப்போது புரிகிறதா?
உணவை எடுக்க மறுத்துவிட்டால்
மயக்கத்தை உனக்கு கொடுக்கிறது
கேட்டது உனக்கு கிடக்காவிட்டால்
கோபத்தால் அறிவை மறைக்கிறது
ஆசையை உனக்கு அள்ளித்தந்து
துன்பத்தில் தள்ளிவிட்டு சிரிக்கிறது
இருப்பது உனக்கு போதவில்லை
என்றஉணர்வை எப்போதும் தருகிறது
உயிருக்கு ஆன்மா சொந்தமில்லை
என்ற உணர்வை உனக்கு தந்ததில்லை
- அக்டோபர் 25 1997
No comments:
Post a Comment