வாழ்க்கையே ஒரு கணக்கு
மனிதன் போடுவான் மனக்கணக்கு
நாமெல்லாம் இறைவனின் பொருப்பு
இதில் உன்னுடன் எனக்கேன் வழக்கு
தத்துவங்கள் சொல்ல எனக்கு தெரியவில்லை
சத்தியத்தை தொலைத்துவிட்டால் வாழ்க்கையில்லை
இந்த மகத்துவத்தை புரிந்துகொண்டால் தொல்லையில்லை
இல்லையேல் நி என்றும் மனிதனில்லை
அவதாரம் நானெடுக்க தெய்வமில்லை
அன்பிருக்கும் வாழ்க்கை என்றும் திகட்டுவதில்லை
அள்ள அள்ள என்றுமது குறைவது இல்லை
இதை நான் சொல்ல வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை
வேற்றுமையே மனங்கள் செய்யும் வேலையடா
ஒன்றுபட்டால் வாழ்க்கை இனிக்கும் வேளையடா
இதில் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் நான் ஏனடா
இதை உணர்ந்தால்தான் வாழ்க்கை என்றும் வாழ்க்கையடா
No comments:
Post a Comment