Wednesday, July 16, 2008

வாழ்க்கையே ஒரு கணக்கு

வாழ்க்கையே ஒரு கணக்கு
மனிதன் போடுவான் மனக்கணக்கு
நாமெல்லாம் இறைவனின் பொருப்பு
இதில் உன்னுடன் எனக்கேன் வழக்கு
தத்துவங்கள் சொல்ல எனக்கு தெரியவில்லை
சத்தியத்தை தொலைத்துவிட்டால் வாழ்க்கையில்லை
இந்த மகத்துவத்தை புரிந்துகொண்டால் தொல்லையில்லை
இல்லையேல் நி என்றும் மனிதனில்லை
அவதாரம் நானெடுக்க தெய்வமில்லை
அன்பிருக்கும் வாழ்க்கை என்றும் திகட்டுவதில்லை
அள்ள அள்ள என்றுமது குறைவது இல்லை
இதை நான் சொல்ல வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை
வேற்றுமையே மனங்கள் செய்யும் வேலையடா
ஒன்றுபட்டால் வாழ்க்கை இனிக்கும் வேளையடா
இதில் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் நான் ஏனடா
இதை உணர்ந்தால்தான் வாழ்க்கை என்றும் வாழ்க்கையடா

No comments:

Blog Archive