எப்புறம் உன்னை பார்த்தாலும் இனிக்கிறது
உன்னை இப்பொழுதே சிறையெடுக்க துடிக்கிறது
வானவில்லை வளைத்திட துடிக்கிறது
அதன் வண்ணங்கள் உன்னிடத்தில் இருக்கிறது
ஏழ்கவிதை இயற்றிட நினைக்கிறது
அதில் உன்புகழை எடுத்துரைக்க இனிக்கிறது
ஏழைக்கு வறுமை என்றும் துணையுண்டு
எனக்கென்று இப்போது யாருண்டு
விளக்கொன்று ஒளிதந்து சிரிக்கிறது
எனையெடுத்து உனைத்தந்தால் உயிருண்டு
1 comment:
Thunai ena uravirunthum manam thavikkum illatha ondrai ,iruppathaaga enni!!
Post a Comment